Monday, January 4, 2010

கோபத்துக்கு உகந்தது

எனது கோபங்களுக்கு நிறைய நியாயங்கள் உண்டு.உலகில் எந்தக் கொடுமைக்குத்தான் நியாயமில்லை?அந்த நியாயங்கள் யாருக்கு வேண்டும்?
அன்பு செய்யவும்,சகித்துக் கொள்ளவும்,சாந்தத்தை வளர்த்துக் கொள்ளவும் உதவாத நியாயங்களால் என்ன பயன்?
என் உள்ளே கோபம் உருவாவது குறித்து எனக்குக் கவலை இல்லை.கோபம் என்ற உணர்வு இல்லாவிடில் நான் பேடியாகிவிடுவேன்.கோபமே கொள்ளாதிருக்க இந்த உலகம் அவ்வளவு யோக்கியமாக இல்லை.எனது கோபமே என்னிடம் உள்ள நல்ல குணம்.ஆனால் அதை சேமித்து வைக்காமல் விரயமாக்குவது தான் எனக்கு சம்மதமில்லை.நான் கோபமே கொள்ளாத அளவுக்கு மழுங்கிப் போவதில் எனக்கு விருப்பம் இல்லை.எனது கோபம் என்னையே வென்றுவிடுகிற அளவுக்கு நான் பலமில்லாதவன் ஆகி விடுவதுதான் எனக்கு வருத்தம் தருகிறது.
எனது கோபங்களுக்கான நியாயங்களை நான் மறுக்கப் போவதில்லை.என்னைக் கோபத்துக்கு ஆளாக்குகின்ற சூழ்நிலைகளிலிருந்தும் நான் தப்பித்துக் கொள்ளவும் போவதில்லை.கோபத்தின் பொது எனது நாவிலிருந்து வெளிப்படுகின்ற சொற்கள் பிறரைச் சுடுகின்ற வெம்மையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.அப்போது நான் பேசுகின்ற வார்த்தையெல்லாம் ஒரு பைத்தியக் காரனின் பிதற்றல் போல் தெரிகிறது.
எனவே கோபங்களை இனி நான் சேமித்து வைக்கப் போகின்றேன்.கோபம் வரும்போது நான் மவுனமாகி விடப்போகிறேன்.செயலற்று இருந்து விடப் போகிறேன்.கோபத்துக்கு உகந்தது மவுனமே.
--ஜெயகாந்தன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஒப்பீடு

காக்கையும் கருப்புதான்;குயிலும் கருப்பு தான்.இவற்றுக்குள் என்ன வித்தியாசம்?
வசந்த காலம் வந்து விட்டாலும்,காக்கை காக்கை தான்!குயிலும் குயில் தான்!
கருப்பாக இருப்பதால் காக்கையும் குயிலும் ஒன்று போல் தோன்றலாம்.
ஆனால் வசந்த காலத்தில்
பாடும் குயிலின் குரலோடு,கத்தும் காக்கையின் குரலை ஒப்பிட்டுப் பார்க்க நினைவும் தோன்றுமா?
அமரகோஷத் என்னும் சம்ஷ்க்ருத செய்யுளின் கருத்து.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உற்சாகம்

மரத்தில் ஆங்காங்கே இலைகள் துளிர்க்கும் போது,"வசந்தம் எவ்வளவு அழகாக இருக்கிறது!"என்று சிலாகித்துக் கொள்ள வேண்டும்.
கிளைகளில் இலைகள் அடர்ந்து பொன்னிறக் கனிகள் ஊஞ்சலாடும் போது,
"மாரிக்காலம் எவ்வளவு நேர்த்தியானது!"என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
கோடையில் இலைகள் எல்லாம் உதிர்ந்து மரம் மொட்டையாக இருக்கும் போது அதன் வழியே வானத்தைப் பார்த்து,"ஆகா,இந்த நட்சத்திரக் கூட்டங்கள் எவ்வளவு அற்புதமாகக் காட்சியளிக்கின்றன!"என்று ரசிக்க வேண்டும்.
எப்போதும் வாழ்வின் பிரகாசமான பகுதிகளைப் பார்த்து உற்சாகம் பெற வேண்டும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net